அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகளை தேடும் பணி தீவிரம்
இன்று காலை 9.15 மணியளவில் போம்டிலா அருகே ராணுவ விமானம் பறந்துகொண்டிருந்த போது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்துள்ளது.கடும் பனிமூட்டத்தின் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என தகவல்